Ninaikatha Neramillai Unnai (Sad)

Ninaikatha Neramillai Unnai (Sad) Song Lyrics In English


ஓஒஓஓஒஓ
ஆஅஆஅஆஅஆஆஅ

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

சோலையில் தேன் மலரில்
உன் நினைவு தோன்றும்
மாலை நன்நேரம் வந்து
என்னை தினம் வாட்டும்

வான் இன்றி வெண்ணிலவு
வந்ததென்ன வீணே
நீ இன்றி நானும் இல்லை
கன்னி இளமானே

கானக் குயில்
தனிமையில் வாடுதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை


காதலின் ராஜ்ஜியத்தில்
தாழ்வு உயர்வு ஏது
காவிரி கங்கையைப் போல்
அன்பிணையும் போது

கணக்குகள் பார்த்துக் கொண்டா
காதல் மனம் சேரும்
விளக்கினைக் கேட்டுக் கொண்டா
முத்துச் சுடர் வீசும்

மான் விழியே மயங்கிடத்
தேவை இல்லை
நம் வழியோ இன்னும்
வெகு தூரம் இல்லை

இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை