Ninaikatha Neramillai Unnai (Sad) |
---|
ஓஒஓஓஒஓ
ஆஅஆஅஆஅஆஆஅ
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
சோலையில் தேன் மலரில்
உன் நினைவு தோன்றும்
மாலை நன்நேரம் வந்து
என்னை தினம் வாட்டும்
வான் இன்றி வெண்ணிலவு
வந்ததென்ன வீணே
நீ இன்றி நானும் இல்லை
கன்னி இளமானே
கானக் குயில்
தனிமையில் வாடுதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
காதலின் ராஜ்ஜியத்தில்
தாழ்வு உயர்வு ஏது
காவிரி கங்கையைப் போல்
அன்பிணையும் போது
கணக்குகள் பார்த்துக் கொண்டா
காதல் மனம் சேரும்
விளக்கினைக் கேட்டுக் கொண்டா
முத்துச் சுடர் வீசும்
மான் விழியே மயங்கிடத்
தேவை இல்லை
நம் வழியோ இன்னும்
வெகு தூரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை