Ninaikkum Pothu Nenjum Kannum |
---|
ஆஆஆஆஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஹாஆஅஆஅஆஅ
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
அணையை மீறும் ஆசை வெள்ளம்
அறிவை மீறுதே
அதையும் மீறி பருவகாலம்
துணையைத் தேடுதே
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
அவரில்லாமல் நானுமில்லை
ஆஆஆஅஆஅஆஅ
அவரில்லாமல் நானுமில்லை
அன்பு சாட்சியே
உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத் தேனேன்று
உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத் தேனேன்று
கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று
கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ