Ninaipathellaam Nadanthu Vitaal

Ninaipathellaam Nadanthu Vitaal Song Lyrics In English


நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை

முடிந்த கதை
தொடர்வதில்லை இறைவன்
ஏட்டினிலே தொடர்ந்த கதை
முடிவதில்லை மனிதன்
வீட்டினிலே

நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை

ஆயிரம் வாசல்
இதயம் அதில் ஆயிரம்
எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ
இருப்பார் வருவதும்
போவதும் தெரியாது

ஒருவர் மட்டும்
குடியிருந்தால் துன்பம்
ஏதுமில்லை ஒன்றிருக்க
ஒன்று வந்தால் என்றும்
அமைதியில்லை


நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை

எங்கே வாழ்க்கை
தொடங்கும் அது எங்கே
எவ்விதம் முடியும் இதுதான்
பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

பாதை எல்லாம்
மாறி வரும் பயணம்
முடிந்துவிடும் மாறுவதை
புரிந்துகொண்டால் மயக்கம்
தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை