Ninaithal Naan |
---|
இருவர் : அஹாஅஹா
அஹாஅஹா
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண்மீனால் பூவொன்று
சீர்கொண்டு உன்னோடு நானும் வருவேன்
இருவர் : நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
காமதேனு வந்து
கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை
அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம்
தெய்வ வீணை நாதம்
கேட்கும்போது மெல்ல
கிள்ள வேண்டும் கன்னம்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
இருவர் : நெருங்கி நெருங்கி பாடுவேன்
இருவர் : லாஆஹாஹாஆஹாஆஹா
தேவ மாதர் கூட்டம்
காம தேவன் ஆட்டம்
ஆடும் போது நாமும்
ஆடிப்பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை
அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும்
ஒளிந்து பார்க்க வேண்டும்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண்மீனால் பூவொன்று
இருவர் : சீர்கொண்டு உன்னோடு
நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்