Ninaithal Nee |
---|
நினைத்தால் நீ வர வேண்டும்
நினைவே ஆசையை தூண்டும்
உனக்காக நானே ஏங்கினேன் ஓ
பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
மாலை மயங்கிய பொழுதினில்
சோலை மரங்களின் நிழல்களில்
கிளிக் கூட்டம் போலே கலந்தால் என்ன
தோகை மணி இதழ் திறந்தது
தாழை மடல் என விரிந்தது
எனக்காகத் தேனை கொடுத்தால் என்ன
என் பூ மேனி உன் கையில் போராடுமோ
என் பூ மேனி உன் கையில் போராடுமோ
பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
ஆஹா ஹா
லலல லலலா லலல லலலா
ஓஹோ ஹோ
லலல லலலா லலல லலலா
ராராரா ராராரா ரா
லாலால லாலால ராரார ராரா ரரா
வானம் கடலுடன் கலக்குது
பாயும் அலைகளும் குதிக்குது
அடங்காத ஆசை உண்டானதோ
நாணம் கரைகளில் நடமிட
காற்றும் சுரங்களை படித்திட
கேட்டாயோ காதல் சங்கீதமோ
நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ
நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ
பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
இருவர் : லா லால லாலா லல லாலா லாலா லாலா
லல லால லால லால லா லாலா லாலா லா