Ninaitthathu Yaro Sad

Ninaitthathu Yaro Sad Song Lyrics In English


நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே

நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே
பாட்டுக்கொரு தலைவனும் நீ
ஏட்டுக்கொரு கலைஞனும் நீ
ஏற்றுக் கொள் என்னை என்னுயிரே

இணைந்த புறா பறந்ததென்ன
இமைகளை கண்கள் மறந்ததென்ன
நடந்த கதை நினைவில்லையோ
நான் உனை சேர மனமில்லையோ

இருவரின் பாதை ஒரு வழி போகும்
இனி வரும் காலம் இருவரை சேர்க்கும்
வரம் தர வேண்டி தவம் இருந்தேன்
வழியினை பார்த்து தனித்திருந்தேன்
பதில் தர வேண்டும் அன்பே

நினைப்பது நான்தான் நீயில்லையே
மறந்தது நீதான் நானில்லையே

வாழ்க்கை இங்கே கனவுகள்தான்
கனவுக்குள் ஏது ஓர் கனவு
கவிதை எல்லாம் வார்த்தைகள்தான்
வார்த்தையில் ஏது கானல் வரி


மயக்கத்தில் வாழ்ந்தேன் மங்கையினாலே
மறுபடி தெளிந்தேன் மதுவினில் நானே
இனிமேல் எந்தன் புதிய வழி
இதுதான் என்று புரிந்ததடி
எனைத் தொடராதே பெண்ணே

நினைப்பது நான்தான் நீயில்லையே
மறந்தது நீதான் நானில்லையே
நினைப்பது நான்தான் நீயில்லையே
மறந்தது நீதான் நானில்லையே

நீ தான் மறந்தாலும்
நினைவில் நான் அழிந்தாலும்
நடந்தவை யாவும் நடந்தவை தான்

நினைப்பது நான்தான் நீயில்லையே
மறந்தது நீதான் நானில்லையே