Nooraandu Kaalam |
---|
நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்
மடிப்பிள்ளை வருவான்
மணி மார்பில் தவழ்வான்
தாலேலோ பாட
நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
தாழை மலரே தங்க நிலவே
தாய்மை என்பது மங்களம்
வாழ்வு கொடுத்து வளையல் கொடுத்து
தலைவன் கொடுத்தான் குங்குமம்
அன்னையாகும் நாளிது
நல்ல காலம் நேருது
அன்னையாகும் நாளிது
நல்ல காலம் நேருது
ஆராரோ தாலேலோ
பாடப் போகும் தாயே
நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்
மடிப்பிள்ளை வருவான்
மணி மார்பில் தவழ்வான்
தாலேலோ பாட
நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்