Nooraandu Kaalam

Nooraandu Kaalam Song Lyrics In English


நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்
மடிப்பிள்ளை வருவான்
மணி மார்பில் தவழ்வான்
தாலேலோ பாட

நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்

தாழை மலரே தங்க நிலவே
தாய்மை என்பது மங்களம்
வாழ்வு கொடுத்து வளையல் கொடுத்து
தலைவன் கொடுத்தான் குங்குமம்

அன்னையாகும் நாளிது
நல்ல காலம் நேருது
அன்னையாகும் நாளிது
நல்ல காலம் நேருது


ஆராரோ தாலேலோ
பாடப் போகும் தாயே

நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்
மடிப்பிள்ளை வருவான்
மணி மார்பில் தவழ்வான்
தாலேலோ பாட

நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்