Noorandu Vazhum Kadhal Idhu |
|---|
ஹாஆஆஹாஹாஆஅ
ஹாஆஅஆஅஆஅ
ஹாஆஅஹாஆஅஹாஆ
ஹாஆஅஆஅஆஅஹாஆஅ
ஹாஆஅஆஅஆஅஹாஆஅ
நூறாண்டு வாழும் காதல் இது
நாள் தோறும் பாடும் பாடல் இது
பூங்காற்றை யார் திரை வைப்பது
பூ மேடை மீது ஆடும் போது
நூறாண்டு வாழும் காதல் இது
நாள் தோறும் பாடும் பாடல் இது
வாசம் வீசும் கொடி
வார்த்தை பேசும் கிளி
வாடும் சூழ்நிலை ஏன்
நீயும் நானும்
குளிர் நீரும் மீனும் என
சேரும் நாள் இது தான்
காலம் தோறும்
விழி நாலும் சேரும்
எனக் காதல் தீர்ப்பெழுது
தூக்கம் ஏது
உனைத் தீண்டிடாது
எனைக் தாக்கும் ராப்பொழுது
வாராய் பனிப் பூவாய்
உனை விழியில் சுமந்து நடப்பேன்
வந்தால் இடம் தந்தால்
உந்தன் மடியில் விழுந்து கிடப்பேனே
நூறாண்டு வாழும் காதல் இது
நாள் தோறும் பாடும் பாடல் இது
பூங்காற்றை யார் திரை வைப்பது
பூ மேடை மீது ஆடும் போது
நூறாண்டு வாழும் காதல் இது
நாள் தோறும் பாடும் பாடல் இது
மலையில் உருவாகும்
மேக மூட்டங்கள்
மனதில் உருவானதேன்
நதியில் உருவாத நீரின் ஓட்டங்கள்
விழியில் உருவானதேன்
இதழ்கள் பரிமாற இதயம் பசியாற
நான் தொடும் தாமரையே
முகில்கள் மறைத்தாலும் மோகம் குறையாது
வான் தொடும் கூன் பிறையே
காலமும் வாழ்வது காதலடி
காதலுக்கே இல்லை சாதலடி
காலமும் வாழ்வது காதலடி
காதலுக்கே இல்லை சாதலடி
தடுப்பவர் வந்தாலும் காதல் ஆவேசம்
பிடிப்பதை விடாதடி
தரையினில் எந்நாளும் நீல ஆகாயம்
தவறியும் விழாதடி
காதலியே கண்மணியே
கூண்டை விட்டு வா வெளியே
ஆனந்த வானத்தில் நாம் இனி பறந்திடவா
