Nyaayamthana

Nyaayamthana Song Lyrics In English


நியாயம்தானா
நியாயம்தானா அன்பே
உன்னை மறந்து விட்டால்
நியாயம்தானா நியாயம்
தானா நானும் நாளும்
மறக்க விட்டால்

ஏக்கம் உந்தன் தாக்கம்
என்னை மென்னு தின்ன
கெஞ்சும் மனம் கொஞ்சும்
உன்னை அள்ளி கொள்ள
காயம் பட்ட நெஞ்சம் சில
காலம் தேம்பும் காதல் கதை
கூறும் கண்ணில் தோன்றும்
ஈரம்

நான் தனிமையிலே
உன்னில் தொலைந்திடவா
நித்தம் முனு முனுத்தேனே
ஓஓ அன்பை வழி மறித்தேனே
மிச்சம் வழி மட்டும் மிஞ்ச
மனம் நொந்து பதை
பதைத்தேனே

நியாயம்தானா
நியாயம்தானா அன்பே
உன்னை மறந்து விட்டால்
நியாயம்தானா நியாயம்
தானா நானும் நாளும்
மறக்க விட்டால்

ஆசை கனவெல்லாம்
நிஜமாகும் வழி தேடி போகும்
என் பாதை தவறா பாசம் உயிர்
நேசம் இருந்தாலும் பயன்
இல்லை காதல் துணை
வாழ்வின் தடையா

சேதம் இனி போதும்
என உள்ளம் சொன்னாலும்
காதல் தருணங்கள் என் கண்
முன்னே தோன்றும் ஆசை
நிறைவேறும் வரை அன்பை
கொல்வேனோ அன்பின்
சிலுவைக்குள் என் ஆசை
மடியாதோ


நியாயம்தானா
நியாயம்தானா உன்னில்
என்னை சிறை எடுத்தாய்
நியாயம்தானா நியாயம்
தானா நெஞ்சை இன்று
சிதற விட்டாய்

செஞ்ச பாவம் தான்
என்ன மனம் ரணமாய் மாறி
வதைக்க தாயாய் என்னை
நான் நினைக்க ஒரு உயிர்
துளி சேர்ந்திட மறுக்க

காலம் வரும் வழி
தெரிந்தே கனவும் போகுது
கடந்தே கரையை தேடியே
அலைந்தே கடல் அலையோ
போகுது பிரிந்தே

ஆண் & கருவினில்
உயிராகி காதல் பிறந்திடவே
கருணை கிடையாதோ விதியே
விதியே துயரங்கள் வரமாகி
வாழ்வும் இனித்திடவே வழி
ஒன்று தருவாயோ விதியே
விதியே

ஆண் & நியாயம்தானா
நியாயம்தானா மாய வாழ்வே
நடப்பதெல்லாம் நியாயம்தானா
நியாயம்தானா நானும் ஆனேன்
நடை பிணமாய்