Odakaran Pattu |
---|
தானே தந்தனனனா
தானே தந்தனனனா
தானே தந்தனனனா
தானே தந்தனனனா ஹேய்
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஆத்தங்கரையோரம் வீடு இது
அன்றில் பறவைகள் கூடு
பூத்துக் கிடக்கிற பாசம் இந்த
பூமி முழுவதும் வீசும்
நேசம் என்னும் நூலாலே சேத்து வச்ச பூமாலை
மாசம் தேதி போனாலும் வாடாதம்மா மண் மேலே
மனசு எல்லாம் ஒண்ணான குடும்பம் இது
பிரிவு என்றும் இல்லாமலே விளங்கும் இது
எப்போதும் இங்கேதான் சந்தோஷ ராகம்
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்