Odam Nathiyinile |
---|
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே ஓ
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
உடலை விட்டு
உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலே
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
ஆசை என்னும்
மேடையிலே ஆ
ஆடி வரும் வாழ்வினிலே
ஆசை என்னும் மேடையிலே
ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
கூட்டுக்குள்ளே
குயிலிருக்கும் ஓஆ
பாட்டு வரும் வெளியினிலே
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியினிலே
குரலை மட்டும் இழந்தபின்னே
குயில் இருந்தும் பயனில்லே
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே ஓ