Odamarathu Mullapola

Odamarathu Mullapola Song Lyrics In English


சிரிக்கிறான் முருகேசன் சிரிக்கிறான்
எதுக்கு சிரிக்கிற ஏல சிரிக்கிற

என்னத்த மறைக்கிற
மெதுவா கனைக்கிற
சமைஞ்ச பொண்ணப்போல
சரிஞ்சி நிக்கிற

எம்மாடி ஆத்தாடி
என் மனசு போச்சேடி

ஒட மரத்து முள்ளப்போல
பனைமரத்துக் கள்ளப்போல
ஒரு வார்த்த அவ சொன்னாளே
சனிக்கிழமை நாலு மணி
விடியக்கால நேரத்துல
என்ன அவ வரச்சொன்னாளே

குளத்துக்குள்ள பாசிப்போல
கோபுரத்து கிளியப்போல
கரும்புக்குள்ள இனிப்பப்போல
சேத்துக்கிட்டாளே

தூக்கனாங்குருவித்தான்
துள்ளுற அருவித்தான்
மூக்கனாங் கயிருதான்
மாட்டுனா மயிலுதான்

எம்மாடி ஆத்தாடி
எம்மனசுப் போச்சேடி ஏ

ஒட மரத்து முள்ளப்போல
பனைமரத்துக் கள்ளப்போல
ஒரு வார்த்த அவ சொன்னாளே
சனிக்கிழமை நாலு மணி
விடியக்கால நேரத்துல
என்ன அவ வரச்சொன்னாளே

ஏ ஏ ஒ ஒ ஓ ஓ
அ அ எ எ ஒ ஓ ஓ
ஏ ஏ ஒ ஒ ஓ ஓ
அ அ எ எ ஒ ஓ ஓ

ஜெயிக்க வந்த சேவல்போல
பறிதவிக்க விட்டாளே
சிவசைலம் வைகைப்போல
பெரண்டு ஓட விட்டாளே
நேத்து வச்ச மீன் கொழம்பு
வாசமாக வந்தாளே
நெல்லு கொட்டும் குளுக்கப்போல
நெனப்புக் கொட்டிப்போனாளே

செங்கல் சூல நெருப்புப்போல
நரம்பு எல்லாம் கொதிக்குது
சேத்து வச்ச வீரமெல்லாம்
காத்துலதான் பறக்குது

கண்ணுக்குள்ள அவ மொகந்தான்
கலர்கலரா தெரியுது
கசக்கிப்போட்ட காகிதமும்
சாமந்தியா விடியுது

எம்மாடி ஆத்தாடி
எம்மனசுப் போச்சேடி

அங்காளி பங்காளி
ஆக்கிப்புட்டா கோமாளி


சிரிக்கிறான் முருகேசன் சிரிக்கிறான்
எதுக்கு சிரிக்கிற ஏல சிரிக்கிற

என்னத்த மறைக்கிற
மெதுவா கனைக்கிற
சமைஞ்ச பொண்ணப்போல
சரிஞ்சி நிக்கிற

ஏ தன்னானே
ஏ தன்னானே ஏ தன்னானே
ஏ தன்னானே ஏ தன்னா முருகேசா
ஏ தன்னானே
ஏ தன்னானே ஏ தன்னானே
ஏ தன்னானே ஏ தன்னா முருகேசா

வெங்கப்பையன் மவனேன்னு
வீதியில சொன்னாங்க
வெலக்கமாத்து அழுக்குன்னு
எல்லாருமே பாத்தாங்க
வெவரங்கெட்ட மூதின்னு
தொவரங்காட்டில் வெச்சாங்க
ஆக்கங்கெட்ட கூவேன்னு
ஜாடையாக பாத்தாங்க

ஆயிரம் பேரு ஏசினாலும்
அவ ஒருத்திப்போதுமே
அவ நெனப்பில் காலு
ரெண்டும் ஆகாசம் ஏறுமே

அரைகொறையா எனக்கு
இப்ப காதலிக்கத் தெரியுது
ஆனாலும் அய்யய்யே
ஒடம்பு எல்லாம் நடுங்குது

எம்மாடி ஆத்தாடி
எம்மனசுப் போச்சேடி

அய்யய்யோ அய்யய்யோ
இவன் மனசு கொய்யய்யோ
ஹா ஹா ஹா ஹா

ஒட மரத்து முள்ளப்போல
பனைமரத்துக் கள்ளப்போல
ஒரு வார்த்த அவ சொன்னாளே
சனிக்கிழமை நாலு மணி
விடியக்கால நேரத்துல
என்ன அவ வரச்சொன்னாளே

குளத்துக்குள்ள பாசிப்போல
கோபுரத்து கிளியப்போல
கரும்புக்குள்ள இனிப்பப்போல
சேத்துக்கிட்டாளே

தூக்கனாங்குருவித்தான்
துள்ளுற அருவித்தான்
மூக்கனாங் கயிருதான்
மாட்டுனா மயிலுதான்

எம்மாடி ஆத்தாடி
எம்மனசுப் போச்சேடி