Odum Megangale |
---|
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
நாடாளும் வண்ண
மயில் காவியத்தில் நான்
தலைவன் நாட்டிலுள்ள
அடிமைகளில் ஆயிரத்தில்
நான் ஒருவன்
மாளிகையே
அவள் வீடு மரக்கிளையில்
என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
ஊரெல்லாம்
தூங்கையிலே
விழித்திருக்கும் என்
இரவு உலகமெல்லாம்
சிரிக்கையிலே அழுதிருக்கும்
அந்த நிலவு
பாதையிலே
வெகு தூரம் பயணம்
போகின்ற நேரம் காதலை
யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சை
நாடுவதெங்கே கூறு
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ