Oh Suyanalam Verimigu Maandhargale |
---|
ஹஹஹஹ்ஹா
ஓ சுயநல வெறி மிகும் மாந்தர்களே
சுகந்தனில் மிதந்திடும் வேந்தர்களே
ஆட்டத்தை நிறுத்துங்கள்
அறிவுடன் விரைவினில் திருந்துங்கள்
ஹெ யு ஃபூல் கெட் அவுட்
எண்ணற்ற ஏழை என்றும்
துன்பத்தில் வாடக் கண்டும்
இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா
எண்ணற்ற ஏழை என்றும்
துன்பத்தில் வாடக் கண்டும்
இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா
பெண்களை தேடிக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு
தன்னலங்கள் பேசுவது வீரமா
பெண்களை தேடிக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு
தன்னலங்கள் பேசுவது வீரமா
கல் நெஞ்சம் மாறுமா
கஷ்டங்கள் தீருமாதீருமாஆஅ
ஆத்திரம் கொள்ளும் அதிசய பிறவிகளே
உங்கள் ஆசை மோகினியின் ஆப்பிள் கன்னங்கள்
கொஞ்சும் குமரிகளின் கோவை அதரங்கள்
சக்கர வானத்தின் சிவப்பு நிறமல்ல
சீரழிந்து வாழும் பாட்டாளியின் ரத்தம்
பேசாதே நிறுத்து
நிறுத்து நிறுத்து நிறுத்து
என்று கத்தாதே
ஹோய் நிறுத்து நிறுத்து நிறுத்து
என்று கத்தாதே
எம்மை அடித்து உதைத்து
அடக்கி ஒடுக்க எண்ணாதே
எம்மை அடித்து உதைத்து
அடக்கி ஒடுக்க எண்ணாதே
உடைத்து எழுந்த அலை கடலை ஹஹா
புகை வெடித்து வளர்ந்த எரிமலையை
தடை தகர்த்து முடிக்க வரும் புயலை
சிலர் தடுத்து நிறுத்த முடியாதே ஹஹா
பெத்தவரே வந்தாலும்
என்னைப் பெத்தவனே வந்தாலும்
வந்தாலும் வந்தாலும்
பாட்டாளியின் குரல் பாட்டாளியின் உடல்
முழங்கியே எழு
தடுக்க முடியாது முடியாது