Ohohoho Manidhargale |
---|
ஆஹா ஆஹா
ஆஆ ஆஆஹா ஓஹோ
ஹோஹோ மனிதர்களே
ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி
பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்
ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்
ஓஹோஹோஹோ
அழுகி போனால்
காய்கறி கூட சமையலுக்கு
ஆகாது அறிவில்லாதவன்
உயிரும் மனமும் ஊருக்கு
உதவாது
உரித்து பார்த்தால்
வெங்காயத்தில் ஒன்றும்
இருக்காது உளறி திரிபவன்
வார்த்தையிலே ஒரு உருப்படி
தேறாது
காலம் போனால்
திரும்புவதில்லை காசுகள்
உயிர்களை காப்பதுமில்லை
ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்
ஓஹோஹோஹோ
அடிப்படை இன்றி
கட்டிய மாளிகை காத்துக்கு
நிக்காது அழகாய் இருக்கும்
காஞ்சிரை பழங்கள் சந்தையில்
விக்காது
விளம்பரத்தாலே
உயர்ந்தவன் வாழ்க்கை
நிரந்தரம் ஆகாது
விளக்கிருந்தாலும்
எண்ணெய் இல்லாமல்
வெளிச்சம் கிடைக்காது
கண்ணை மூடும்
பெருமைகளாலே தம்மை
மறந்து வீரர்கள் போலே
ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்
ஓஹோஹோஹோ
ஓதிய மரங்கள்
பெருத்திருந்தாலும் உத்திரம்
ஆகாது உருவத்தில் சிறியது
கடுகானாலும் காரம் போகாது
பழிப்பதனாலே
தெளிவுள்ள மனசு பாழ்
பட்டு போகாது பாதையை
விட்டு விலகிய கால்கள்
ஊர் போய் சேராது
காற்றை கையில்
பிடித்தவன் இல்லை தூற்றி
தூற்றி வாழ்ந்தவன் இல்லை
ஓஹோஹோஹோ
மனிதர்களே ஓடுவது எங்கே
சொல்லுங்கள் உண்மையை
வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்
ஓஹோஹோஹோ