Om Nadam Omkara Nadam |
---|
ஓம் ஓம் ஓம்ம்ம்(8)
நாதம்ஓம்கார நாதம்
நாத மயமான இறைவா இறைவா
நாத மயமான இறைவா
தில்லை நடனமாடுகின்ற தலைவா
வேத மயமான சிவனே
இந்த விரல்கள் இருந்தென்ன பயனே
வேத மயமான சிவனே
இந்த விரல்கள் இருந்தென்ன பயனே
நாத மயமான இறைவா இறைவா
மாலை சூடியவள் மௌனத்தில் இருக்க
பிள்ளை பேச்சில் மனம் புண்ணாகி தவிக்க
மாலை சூடியவள் மௌனத்தில் இருக்க
பிள்ளை பேச்சில் மனம் புண்ணாகி தவிக்க
மிருதங்கம் போல் இங்கு நானும்
ஏன் இரு பக்கம் அடி வாங்க வேண்டும்
மிருதங்கம் போல் இங்கு நானும்
ஏன் இரு பக்கம் அடி வாங்க வேண்டும்
தந்தை ஆணை மீறி நின்ற மகனே
தந்த காயம் ஆறவில்லை அறனே
நாத மயமான இறைவா இறைவா
கங்கை நதியுடனே திங்கள்
முடி சுமந்து மங்கை ஒரு பாதி மேவ
இந்த அண்டம் குலுங்கி எழ என்றும்
அழகொளிரும் அங்கம் தனில் பாதம் தாவ
நீ உடுக்கை தனை கொண்டு ஓசை எழுப்புகையில்
தடுக்க விதி ஏதும் உண்டா
நீ உடுக்கை தனை கொண்டு ஓசை எழுப்புகையில்
தடுக்க விதி ஏதும் உண்டா
இங்கு உனக்கொரு விதியோ எனக்கொரு விதியோ
பிரித்துப் பார்ப்பதென்ன முறையோ
இது முறையாஇது முறையா