Onna Vitta Yarum Illa |
---|
பாடலாசிரியர் : வாலி
ஒன்ன விட்டா யாரும் இல்ல சாமி இந்த உசுர கொஞ்சம் வாழ வச்சு காமி தாயப் போல கூப்பிடாம வா நீ ஒரு தாலிப் பிச்ச கேக்குறப்போ தா நீ கண்ணு பாக்காமலும் காது கேக்காமலும் கோயில் கொண்டதெல்லாம் ஏன் நீ
ஒன்ன விட்டா யாரும் இல்ல சாமி இந்த உசுர கொஞ்சம் வாழ வச்சு காமி தாயப் போல கூப்பிடாம வா நீ ஒரு தாலிப் பிச்ச கேக்குறப்போ தா நீ
இந்த சாதி சனம் எல்லாம் காக்கை இனம் மாமன் மச்சான்னுதான் பேரு யாரும் சுத்தம் இல்ல நல்ல ரத்தம் இல்ல சொன்னா குத்தம் இல்ல பாரு
தானே வந்தவங்க தானம் செஞ்சவங்க சொந்த பந்தம் இல்ல யார் யாரோ மாமன் கண் முழிக்க மயிலு தத்தளிக்க சாமி உன்னாலதான் ஆகாதோ மயங்குறப்போ கலங்குறப்போ மயங்குறப்போ கலங்குறப்போ அஞ்சிக் கெடக்குது நெஞ்சம் துடிக்குது
ஒன்ன விட்டா யாரும் இல்ல சாமி இந்த உசுர கொஞ்சம் வாழ வச்சு காமி தாயப் போல கூப்பிடாம வா நீ ஒரு தாலிப் பிச்ச கேக்குறப்போ தா நீ
சோடி கண்ட புள்ள சொகத்த கண்டதில்ல வாடி நிக்குதையா பாவம் பூவு வாடாமலும் பொட்டு போகாமலும் காவல் நீதான் இந்த நேரம்
பால் போல் வெள்ளை மனம் பச்சப் பிள்ளை குணம் பாய் மேல் திண்டாடுது பாரையா உன்ன நம்பிடுவோம் நம்பி கும்பிடுவோம் துன்பம் தீக்குறது யாரையா
செறகொடிஞ்ச சிறு குருவி செறகொடிஞ்ச சிறு குருவி செத்துப் பொழச்சிங்கு கண்ணத் தொறந்திட
ஒன்ன விட்டா யாரும் இல்ல சாமி இந்த உசுர கொஞ்சம் வாழ வச்சு காமி தாயப் போல கூப்பிடாம வா நீ ஒரு தாலிப் பிச்ச கேக்குறப்போ தா நீ கண்ணு பாக்காமலும் காது கேக்காமலும் கோயில் கொண்டதெல்லாம் ஏன் நீ
ஒன்ன விட்டா யாரும் இல்ல சாமி இந்த உசுர கொஞ்சம் வாழ வச்சு காமி தாயப் போல கூப்பிடாம வா நீ ஒரு தாலிப் பிச்ச கேக்குறப்போ தா நீ