Ooradangum Samathiley |
---|
ஊரடங்கும் சாமத்துல
நான் ஆஹான் ஒருத்தி மட்டும்
முழிச்சிருந்தேன் ஊர் கொடி
ஓரத்தில உன் நெனப்புல
படுத்திருந்தேன் காத்தடிச்சி
சல சலக்கும் ஓலை எல்லாம்
உன் சிரிப்பு புரண்டு படுத்தாலும்
பாவி மகன் உன் நெனப்பு பாவி
மகன் உன் நெனப்பு
ஊரடங்கும் சாமத்துல
நான் ஆஹான்
வெள்ளியில தீபெட்டியாம்
மச்சானுக்கு வித விதமா பீடி
கட்டாம் வாங்கி தர ஆச
வச்சேன் காச சுள்ளி வித்து
சேர்த்து வச்சேன்
சம்புகனார் கோயிலுக்கு
சூடம் கொளுத்தி வச்சேன்
போறவங்க வாறவங்க பேச்சை
எல்லாம் கேட்டு வச்சேன் நான்
பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்
ஒரு பாக்கு போட்டாலே
உள் நாக்கு செவந்திடுமே ஒரு
பாக்கு போட்டாலே உள் நாக்கு
செவந்திடுமே
உம்மேல ஏக்கம் வந்து
என் தூக்கம் எல்லாம் போச்சி
மச்சான் உம்மேல ஏக்கம் வந்து
என் தூக்கம் எல்லாம் போச்சி
மச்சான்
ஊரடங்கும்
சாமத்துல நான் ஆன்
கழனி சேத்துக்குள
களை எடுத்து நிற்கையில
உன் சொத்த பல்லை போல
ஒரு சோழிய நான்
கண்டெடுத்தேன்
கண்டெடுத்த சோழி
கண்டு கலங்கி நிற்கையில
களை எடுத்து பிந்துதுன்னு
பண்ணையாரு பேசினாரே
களை எடுத்து பிந்துதுன்னு
பண்ணையாரு பேசினாரே
கருவேலம் முள்
எடுத்து கள்ளி செடியில்
எல்லாம் உம்பேரு எம்பேர
ஒரு சேர எழுதினோமே
ஊருணி கரையோரம்
உட்கார்ந்து பேசினோமே
ஊருக்காரன் தலைய கண்டு
ஓடி நாம ஒளிஞ்சோமே
ஊருக்காரன் தலைய கண்டு
ஓடி நாம ஒளிஞ்சோமே
ஊரு என்ன சொன்னாலும்
யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவேன்னு
துண்டு போட்டு தாண்டுனியே
அந்த வார்த்தையில
நான் இருக்கேன் வாக்க பட
காத்திருக்கேன் வார்த்தையில
நான் இருக்கேன் வாக்க பட
காத்திருக்கேன்