Oorengum Maappillai Oorvalam

Oorengum Maappillai Oorvalam Song Lyrics In English


ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ

ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ

இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம்
இரு விழிபோல் வரவேண்டும்
இன்முக கணவன் தன் முகம் பார்த்து
கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும்

இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம்
இரு விழிபோல் வரவேண்டும்
இன்முக கணவன் தன் முகம் பார்த்து
கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும்
இவை வேண்டும் என்று குரல் கேட்க இங்கு
ஒரு தெய்வம் உண்டு மறவாதே
ஒரு தெய்வம் உண்டு மறவாதே

ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ


உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான்
ஒரு நாள் வருவான் உன்னைத்தேடி
கண்களை திறந்து இதயத்தை நினைத்து
கருணையும் தருவான் மலர் சூடி

உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான்
ஒரு நாள் வருவான் உன்னைத்தேடி
கண்களை திறந்து இதயத்தை நினைத்து
கருணையும் தருவான் மலர் சூடி
குலமாதர் யாரும் தனியாக வாழும்
விதியொன்றும் இல்லை மறவாதே
விதியொன்றும் இல்லை மறவாதே

ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ