Oorengum Thedinen |
---|
இசை அமைப்பாளர் : ஏ எம் ராஜா
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடி
என் உள்ளத்தை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
உள்ளமெங்கும் தேடினேன்
உறவினை கண்டேன்
அந்த உறவினிலே மூழ்கினேன்
பிரிவினை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
கைகொடுத்த தெய்வம் இன்று
எங்கு சென்றதோ
என்னை காத்திருக்க வைத்துவிட்டு
எங்கே நின்றதோ
இன்று கண்கலங்க
நின்றிருந்தேன் சேதி வந்தது
நான் கடந்து வந்த வானில்
விடிவெள்ளி முளைத்தது
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
காண வந்த மாளிகையின்
கதவு திறந்தது
பெரும் கருணையோடு
அருள் விளங்கும் கண் திறந்தது
ஆற்று வெள்ளம் போல
நெஞ்சின் மடை திறந்தது
நல்ல அமர தீபம் போல
வாழ்வில் ஒளி பிறந்தது
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
தாழ்வினிலும் வாழ்வினிலும்
உங்கள் கையிலே
என் சஞ்சலமும் நிம்மதியும்
உங்கள் சொல்லிலே
வாழ்க என்று நீங்கள்
சொன்னால் வாழும் என் மனம்
வாழ்க என்று நீங்கள்
சொன்னால் வாழும் என் மனம்
இல்லை மறைக என்று வரம்
கொடுத்தால் மறைய சம்மதம்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடி
என் உள்ளத்தை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்