Oorukku Nee Uzhaithaal

Oorukku Nee Uzhaithaal Song Lyrics In English


ஊருக்கு நீ உழைத்தால்
உன்ன‌ருகே அவ‌ன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்
ஆ ஆ ஆ ஆ

ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண் பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம்தான்

ஆதி கடவுள் ஒன்றேதான்

உள்ளத்தில் உள்ளவனை
ஒளி விளக்காய் நிற்பவனை
ஆ ஆ ஆ ஆ
ஊரெங்கும் தேடினாலும்
ஒரு நாளும் காண்பதில்லை
க‌ண்ட‌வ‌ரும் சொன்ன‌தில்லை
சொன்ன‌வ‌ரும் க‌ண்ட‌தில்லை
காற்றைப் போல் பூமியிலே
கலந்திருப்பான் ஆண்டவனே

ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண் பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம்தான்


ஆதி கடவுள் ஒன்றேதான்

ம‌த‌ம் என்னும் சொல்லுக்கு
வெறி என்றோர் பொருளும் உண்டு
ம‌னித‌ராய் பிறந்த‌வ‌ர்க‌ள்
ம‌த‌த்தால் பிரிந்து விட்டார்
ம‌த‌த்தால் பிரிந்தவ‌ர்க‌ள்
அன்பினால் ஒன்றுப‌ட்டு
ஒன்றே குலமாக‌
ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்

ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண் பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம்தான்

ஆதி கடவுள் ஒன்றேதான்