Oorukkum Theriyaadhu Yaarukkum Puriyaadhu Sad

Oorukkum Theriyaadhu Yaarukkum Puriyaadhu Sad Song Lyrics In English


ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு
உள்ளம் ஏங்குவது

ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது

உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உண்மையை உலகம் அறியாது
உண்மையை உலகம் அறியாது
உன்னையன்றி வாழ்க்கை ஏது

ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது


காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது

ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு
உள்ளம் ஏங்குவது

ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது