Ooruperu Poonjoladhan |
---|
ஊரு பேரு பூஞ்சோலைத்தான்
ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்
ஊரு பேரு பூஞ்சோலைத்தான்
ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்
நம்ம ஊரப் பாத்துக்க புள்ள
அடி முப்போகம்தான்
நாலு பக்கம் நெஞ்சை அள்ளும்
நஞ்சை புஞ்சைதான்
ஊருக்குள்ள வாறத்துக்கும்
ஊர விட்டு போறத்துக்கும்
ஓடம் தானே வாகனமாச்சு
காவல் துறை ஏதுமில்ல
குத்தம் செய்ய யாருமில்ல
சொல்லப் போனா ஆகமொத்தம்
சனங்க மனசு சுத்தம்
மாசத்துல வாரம் ஒரு பஞ்சாயத்து கூடும்
சொல்லுகிற தீர்ப்பு அது எல்லாருக்கும் வேதம்
ஊரு பேரு பூஞ்சோலைத்தான்
ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்
ஊரு பேரு பூஞ்சோலைத்தான்
ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்
நம்ம ஊரப் பாத்துக்க புள்ள
அடி முப்போகம்தான்
நாலு பக்கம் நெஞ்சை அள்ளும்
நஞ்சை புஞ்சைதான்
ஆணும் பொண்ணும் காதலிச்சா
ஆச மேல ஆச வச்சா
ஆதரிக்கும் ஊர் சனம்தானே
ஏங்குகிற இளசுகள
எண்ணப்படி சேத்து வைக்கும்
மாலை கட்டி மணம் முடிக்க
மேளம் கொட்டி வாழ்த்துரைக்கும்
தொட்டதெல்லாம் மின்னும்
கைப் பட்டதெல்லாம் பொங்கும்
நட்டதெல்லாம் பூக்கும்
நாம நம்பும் தெய்வம் காக்கும்
ஊரு பேரு பூஞ்சோலைத்தான்
ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்
ஊரு பேரு பூஞ்சோலைத்தான்
ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்
நம்ம ஊரப் பாத்துக்க புள்ள அடி முப்போகம்தான்
நாலு பக்கம் நெஞ்சை அள்ளும் நஞ்சை புஞ்சைதான்