Oorvalamaaga Maappillai Pennum |
---|
ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே
ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே
வெட்கத்தாலே
பெண்ணின் முகத்தில்
இட்ட மஞ்சளும் சிவக்குது
வெட்கத்தாலே பெண்ணின்
முகத்தில் இட்ட மஞ்சளும்
சிவக்குது
பட்டுக் கைவிரல்
பட்டதுமே அவள் பளிங்கு
விழிகள் ஏன் தவிக்குது
பட்டுக் கைவிரல்
பட்டதுமே அவள் பளிங்கு
விழிகள் ஏன் தவிக்குது
ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே
விறகு வெட்டியிடம்
வீணை கிடைத்தால் குருடா்
கையிலே கவிதை கொடுத்தால்
இருவரும் தவிப்பது அதிசயமா
அதிசயமா
இது இவருக்கும்
பொருந்திடும் உவமை
அம்மா இது இவருக்கும்
பொருந்திடும் உவமை
அம்மா
திறமையில்லாமல்
ஓட்டுவதாலே திண்டாடும்
வண்டி தடம் புரளும் திண்டாடும்
வண்டி தடம் புரளும்
திறமும் பண் பாடும்
இல்லாத நாடு தாழ்வு உயர்விலே
இடறி விழும் திறமும் பண் பாடும்
இல்லாத நாடு தாழ்வு உயர்விலே
இடறி விழும்
உயர்வு தாழ்வுகள்
நம்மிலே இல்லை உள்ளமும்
ஒன்றாய் ஆனது உயர்வு தாழ்வுகள்
நம்மிலே இல்லை உள்ளமும்
ஒன்றாய் ஆனது
உருவினில் தானே
பேதம் தோணுது நிலையினில்
சமத்துவம் மேவுது உருவினில்
தானே பேதம் தோணுது
நிலையினில் சமத்துவம்
மேவுது
ஆள்பவள் நீயே
அடிமையும் நானே அணு
அளவும் இல்லை சமத்துவம்
நம்மில் அணு அளவும் இல்லை
சமத்துவம்
சரி நிகராக யாவரும்
வாழ்வில் இருப்பது தான்
அதன் தத்துவம் சரி நிகராக
யாவரும் வாழ்வில் இருப்பது
தான் அதன் தத்துவம்
அந்த நாள்
என்று வந்திடும்
மக்கள் சிந்தித்தாலே
பிறந்திடும்
அந்த நாள்
என்று வந்திடும்
மக்கள் சிந்தித்தாலே
பிறந்திடும்
கூட்டுறவாக நாமிருந்தாலே
நாட்டின் கவலைகள் அகலுமே ஏட்டில்
இல்லாத எல்லா புதுமையும் என்றும்
வாழ்விலே திகழுமே
ஆண் & கூட்டுறவாக
நாமிருந்தாலே நாட்டின்
கவலைகள் அகலுமே
ஏட்டில் இல்லாத எல்லா
புதுமையும் என்றும்
வாழ்விலே திகழுமே
ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே