Or Mirugam

Or Mirugam Song Lyrics In English


ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஅ
ஆஆஆஆ

யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே
காடும் அழுதாச்சே

ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை தன்னடிமை
செய்வதும் இல்லை
ஓர் மனிதன்
ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே

ஆஆஆஅ ஆஆஅ
ஆஆஅ ஆஆஅ

தாழ் போன வீடு
கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா
துணையானதே
தாய் போல நெஞ்சு
தாளாத அன்பு
மழை தண்ணியோடு
மாசில்லையே


வலி சொல்லவே
இல்லையே வாய்மொழி
கண்ணீரு தான்
ஏழையின் தாய்மொழி
எங்கோ தவிக்கும்
உன் பிள்ளையே
இங்கே உறவு
என் பிள்ளையே

கை கொண்ட
நெல்லு உமியாகும் போது
கத்தாலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம்
உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே

ஒரு ஜீவனோ
உறவிலே சேருதே
இரு ஜீவனோ
ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க
ஆளில்லையே
காலம் நடக்கும்
காலில்லையே

யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே
காடும் அழுதாச்சே

ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை தன்னடிமை
செய்வதும் இல்லை
ஓர் மனிதன்
ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை