Or Mirugam |
---|
ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஅ
ஆஆஆஆ
யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே
காடும் அழுதாச்சே
ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை தன்னடிமை
செய்வதும் இல்லை
ஓர் மனிதன்
ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை
யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஆஆஆஅ ஆஆஅ
ஆஆஅ ஆஆஅ
தாழ் போன வீடு
கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா
துணையானதே
தாய் போல நெஞ்சு
தாளாத அன்பு
மழை தண்ணியோடு
மாசில்லையே
வலி சொல்லவே
இல்லையே வாய்மொழி
கண்ணீரு தான்
ஏழையின் தாய்மொழி
எங்கோ தவிக்கும்
உன் பிள்ளையே
இங்கே உறவு
என் பிள்ளையே
கை கொண்ட
நெல்லு உமியாகும் போது
கத்தாலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம்
உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே
ஒரு ஜீவனோ
உறவிலே சேருதே
இரு ஜீவனோ
ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க
ஆளில்லையே
காலம் நடக்கும்
காலில்லையே
யாத்தே கால கூத்தே
வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே
காடும் அழுதாச்சே
ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை தன்னடிமை
செய்வதும் இல்லை
ஓர் மனிதன்
ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை