Oraayiram Karpanai Male |
---|
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா ஓடிவா
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா ஓடிவா
நான் பாடும் ராகங்கள்
கார்கால மேகங்கள்
நான் பாடும் ராகங்கள்
கார்கால மேகங்கள்
தேன் மாரி பெய்யும் தீரும் தாகங்கள்
தென்றலின் ஓசை பாட்டாக
தென்னையில் ஆடும் கீற்றாக
என் மனம் ஆடும் தானாக
கீதமே நாதமே ஓடிவா
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ஒரு கோடி இன்பங்கள்
ஒன்றாக வந்தாலும்
ஒரு கோடி இன்பங்கள்
ஒன்றாக வந்தாலும்
உறவாடும் உள்ளம் இசை பண்ணோடு
எத்தனைக் காலம் வாழ்ந்தாலும்
என்னென்ன கோலம் கொண்டாலும்
என்னுயிர் நாதம் சங்கீதம்
கீதமே நாதமே ஓடிவா
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா ஓடிவா
ஓடி வாஓடி வாஓடி வா ஓடி வா