Ore Thaai Ore Kulam

Ore Thaai Ore Kulam Song Lyrics In English


ஓம் சக்தியே பராசக்தியே
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
ஓம் சக்தியே மருவூர் அரசியே
ஓம் சக்தியே ஓம் விநாயகா
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே

ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே

ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே

வாழும் வீட்டையும் ஆலயம் போல்
இவன் வலம் வந்து வணங்குகிறான்
ஆதி சக்தியின் மறு பிறப்பாய் எங்கள்
ஐயனும் விளங்குகிறான்

சூழும் மாந்தர்கள் இருள் நீக்கும்
ஞான சூரியன் இவன் அல்லவா
காலம் காலமாய் தவம் இருந்து
பெற்ற காவிய மகனல்லவா

ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே

ஹரிசன மாந்தரும் சரி சனம்தான்
முதல் தரிசனம் அவர்களுக்கே
ஆலயம் தோன்றிய நாள் முதலாய்
இது வழி வழி வந்த வழக்கே


கருவை தாங்கிடும் தாய்க்குலமும்
இங்கு கருவறை புகுந்திடலாம்
பூஜை புனஸ்காரம் யாவையும்
இங்கு பூவையர் புரிந்திடலாம்

ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே

மதங்கள் யாவையும் கடந்து நிற்கும்
ஒரு மார்க்கத்தை காட்டியவன்
மனிதர் யாவரும் ஓரினம்தான் எனும்
நியாயத்தை நாட்டியவன்

மூல மந்திரம் ஓதுகிறார் எங்கள்
முன் வினை தீர்ந்திடவே
மருவத்தூரிலே கொலுவிருக்கும்
எங்கள் மன்னவன் வாழியவே

ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே

அடிகளே வருகவே
முனிவனே வாழ்கவே
அடிகளே வருகவே
முனிவனே வாழ்கவேவாழ்கவே