Ore Thaai Ore Kulam |
---|
ஓம் சக்தியே பராசக்தியே
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
ஓம் சக்தியே மருவூர் அரசியே
ஓம் சக்தியே ஓம் விநாயகா
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே
ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே
ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே
வாழும் வீட்டையும் ஆலயம் போல்
இவன் வலம் வந்து வணங்குகிறான்
ஆதி சக்தியின் மறு பிறப்பாய் எங்கள்
ஐயனும் விளங்குகிறான்
சூழும் மாந்தர்கள் இருள் நீக்கும்
ஞான சூரியன் இவன் அல்லவா
காலம் காலமாய் தவம் இருந்து
பெற்ற காவிய மகனல்லவா
ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே
ஹரிசன மாந்தரும் சரி சனம்தான்
முதல் தரிசனம் அவர்களுக்கே
ஆலயம் தோன்றிய நாள் முதலாய்
இது வழி வழி வந்த வழக்கே
கருவை தாங்கிடும் தாய்க்குலமும்
இங்கு கருவறை புகுந்திடலாம்
பூஜை புனஸ்காரம் யாவையும்
இங்கு பூவையர் புரிந்திடலாம்
ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே
மதங்கள் யாவையும் கடந்து நிற்கும்
ஒரு மார்க்கத்தை காட்டியவன்
மனிதர் யாவரும் ஓரினம்தான் எனும்
நியாயத்தை நாட்டியவன்
மூல மந்திரம் ஓதுகிறார் எங்கள்
முன் வினை தீர்ந்திடவே
மருவத்தூரிலே கொலுவிருக்கும்
எங்கள் மன்னவன் வாழியவே
ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே
அடிகளே வருகவே
முனிவனே வாழ்கவே
அடிகளே வருகவே
முனிவனே வாழ்கவேவாழ்கவே