Oru Aanum Pennum |
---|
ஒரு ஆணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்
இது பட்டுப் போன்ற தேகம்
விரல் தொட்டுப் பார்க்க நோகும்
இவள் சிரித்ததும் சிவந்து விடும்
ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்
இவன் மஞ்சம் போடும் மன்னன்
இவன் கொஞ்சும் போது கண்ணன்
என் உயிர்வரை பருகியவன்
உன்னை எண்ணித்தானே என் வீட்டில்
நந்தவனம் என்று செடி நட்டு வைக்கிறேன்
உன்னை எண்ணித்தானே கண்ணாளா
படுக்கையில் பாதியிடம் விட்டுவைக்கிறேன்
என்னை உனக்குள் தொலைத்து விட்டேன்
இந்தக் கன்னியே எண்ணி எண்ணியே
இளைத்து விட்டேன்
என் கொம்புத்தேனே
உனை நம்பித்தானே
என் தங்கக் கூண்டைத் தாண்டி வந்தேனே
ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்
இவன் மஞ்சம் போடும் மன்னன்
இவன் கொஞ்சும் போது கண்ணன்
என் உயிர்வரை பருகியவன்
உந்தன் பேரைச் சொன்னால் எந்நாளும்
உள்ளுக்குள்ளே தேன் சுரக்கும் உச்சரிக்கிறேன்
தந்த முத்தம் என்ன இப்போதே
வட்டியிட்டுத் தந்துவிடு எச்சரிக்கிறேன்
இன்பக் கடலில் இறங்கி விட்டேன்
நனைந்து விட்டேன் முத்துக் குளிக்க மறந்து விட்டேன்
என் கன்னித் தேனே உனை மன்னித்தேனே
என் கட்டில் மீது கப்பம் கட்ட வா
ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்
ஹஹ்ஹ
இவள் சிரித்ததும் சிவந்து விடும்