Oru Devathai |
---|
ஹாஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
என் மனதில் சோகங்கள் தீர
அதில் இனிமை என்றென்றும் சேர
பல புதிய ராகங்கள் பாட
அதில் இனிய நாதங்கள் கூட
அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
காட்டினில் பூ வாசம்
காற்றோடு போகும்
ஏட்டினில் எழுதாத கவி போலே
கடலினில் மழை நீரும்
வீணாதல் போலே
உலகினில் வீணாக இருந்தேனே
பன் நெடும் காலங்கள்
மூடிய அறை தன்னில்
பொன் விளக்கும் ஏற்ற
இருள் அங்கு விலகாதோ
நான் செய்த பாவங்கள்
தீராத ஒன்று
நீ வந்து தீர்த்தாயே
என் தேவி இன்று
அன்பே என் நன்றி என் சொல்வேன்
ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
ஹாஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
சந்திர ஊர்கோலம் கண்டேன்
மண் மீது
பெண் உந்தன் முக நிலவு மேலே
பெண்ணினை நிலவாக
பார்க்கின்ற நெஞ்சம்
உண்மையை உணராது மண் மேலே
காதலில் உளறாத
காளையும் இங்கேது
கன்னியைச் சேராத
வாழ்வினில் நிறைவேது
நீ சொல்லும் வேதங்கள்
புதிதல்ல அன்பே
என்றாலும் புதிதாக
கண்டேனே இங்கே
மாறாது மாறாது என் அன்பே
ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
பல புதிய ராகங்கள் பாட
அதில் இனிய நாதங்கள் கூட
என் மனதில் சோகங்கள் தீர
அதில் இனிமை என்றென்றும் சேர
ஒரு தேவதை வந்தது
ஆஅஆஅஆஆ
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
ஆஅஆஅஆஆ
ஒரு தேவதை வந்தது
ஆஅஆஅஆஆ
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
ஆஅஆஅஆஆ