Oru Kaadhal Devathai |
---|
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ்க்கவிதை பாடினான்
ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
தமிழ் கொண்ட வைகைப்போலே
திருமேனி நடைபோட
பார் வேந்தன் நாளும்
ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடையாட
பனிப் போல கொஞ்சும் உன்னை
பார்வைகள் எடைபோட
நீ கொஞ்சம் தழுவ
நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடைபோட
மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ
வா மெல்ல வா
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
கடல் நீலம் கொண்ட கூந்தல்
கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை
கடன் தந்த தேகம்
மன்னா நீ கொண்டாட
மாமல்லன் என்னைக் கொஞ்சும்
சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத
காதல் சிற்பங்கள் உருவாக
ஊடல் எனும் ஒரு நாடகம்
கூடல் தனில் அரங்கேறிடும்
வா நெருங்கி வா
ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ்க்கவிதை பாடினான்
லாலா லால்ல லால்ல லா
லாலா லால்ல லால்ல லா