Oru Kelvi Unnai Ketkiraen |
---|
ஆஆஆஆஆ ஆஹ்ஆஹ்ஆஹ்ஆஆ
ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே வாள் கொண்டு அறுத்தாலும் பிரியாது அந்த வானம்
நீ என்னை வெறுத்தாலும் விலகாது இந்த நேசம்
ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே
கங்கை இன்றி தேசம் வாழலாம் ஓஓ காற்றில்லாமல் ஜீவன் வாழுமா நேற்றில்லாமல் இன்று தோன்றலாம் ஓஓ நீ இல்லாமல் வாழ்வு தோன்றுமா
வானில்லாமல் கிழக்கில் என்றும் உதயமில்லை காதலி நீ இல்லாமல் என் உடம்பில் இதயமில்லை காதலா அன்பேஅன்பேஅன்பே
ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே
ரெண்டு கிளிகள் காதல் கொள்கையில் அதை கண்டு யாரும் பிரிப்பதில்லையே ஆணும் பெண்ணும் காதல் கொள்கையில் இந்த ஊரில் யாரும் பொறுப்பதில்லையே
ஆணவங்கள் பிரித்தபோதும் அணைக்கவேண்டும் தேவனே ராணுவங்கள் தடுத்தபோதும் தழுவிகொள்வோம் ஜீவனே அன்பேஅன்பேஅன்பே
ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே
வாள் கொண்டு அறுத்தாலும் பிரியாது அந்த வானம் நீ என்னை வெறுத்தாலும் விலகாது இந்த நேசம்
ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே