Oru Murai |
---|
ஒரு முறை ஒரே முறை
உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலை முறை
உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள்
கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்
ஒரு முறை ஒரே முறை
கட்டழகில் இல்லையடி சிறப்பு
குங்குமப் பொட்டழகில்தான் அது இருக்கு
பொன் நகையில் இல்லையடி மதிப்பு
உன் புன்னகையில்தான் அது இருக்கு
மற்றவர்க்கு நீ தரும் மதிப்பு
உன்னைப் பெற்றவர்க்கு சேர்த்திடும் சிறப்பு
பெற்ற உடன் முடிந்தது கணக்கு
பேரு வைத்த கடன் தீரவில்லை இவர்க்கு
தன் நிலை தவறியே ஆடிடும் பெண்மையே
தன் நிலை தவறியே ஆடிடும் பெண்மையே
உன் நிலை தவறினால் தாழ்ந்திடும் தாய்மையே
ஒரு முறை ஒரே முறை
உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலை முறை
உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள்
கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்
மாடி மேல மாடி கட்டி வாழும்
பண வர்கத்துக்குப் பசி எங்கு தெரியும்
கூடு போல வீடு கட்டி வாழும்
ஏழை கூட்டத்துக்குத் தான் அது புரியும்
பிறந்த நாளிலே ஆட்டம்
வெறும் பணத்துக்குத்தான் இந்தக் கூட்டம்
உன்னை வளர்ப்பது உழைப்பவர் கூட்டம்
அவர் உழைப்பினில்தான் இந்த ஆட்டம்
பிறப்பிலும் இறப்பிலும் ஒன்றுதான் தெரியுமா
பிறப்பிலும் இறப்பிலும் நாம் ஒன்றுதான் தெரியுமா
வளர்ப்பிலும் வாய்ப்பிலும் நீ வந்தது புரியுமா
ஒரு முறை ஒரே முறை
உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலை முறை
உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள்
கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்