Oru Nadodi

Oru Nadodi Song Lyrics In English


ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்

ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்
இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்
நீ கேளு தாய் போல நெஞ்சை இது தாலாட்டும்
நாள் தோறும் தாலாட்டில் உன்னை இது நீராட்டும்
வண்ணக் கிளியே ஹோஹோஹோ

ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்
இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்

வாய்க்காலில் காலை விட்டால் ஆழம் புரியும்
மேலாகப் பார்த்து நின்றால் என்ன தெரியும்
வாய்ப் பாட்டை கேட்ட பின்னால் என்னைப் புரியும்
கேட்காமல் கதை அளந்தால் என்ன தெரியும்
என்னுடைய பாட்டுக்குள்ளே மண்ணின் மணம் வீசிடும்
முத்தமிழில் மூடி வைத்த சொத்துகளை பேசிடும்
பாட்டெடுத்தா பட்ட மரம் பூப் பூத்திடும்
மலைப் பாறைகளும் வாய் வெடிச்சு நீர் வார்த்திடும்
அட ஊரார்தான் பாராட்டும் பாட்டாளி நான்

ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்
இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்


கல்யாணம் காட்சிக்கென்று பாட்டு இருக்கு
கூத்தாடும் மேடைக்கென்று பாட்டு இருக்கு
தைப் பொங்கல் தீவாளிக்கும் பாட்டு இருக்கு
முந்நூறு நாட்களுக்கும் பாட்டு இருக்கு
ஆனாலும் பாட்டு எல்லாம் மக்களைப் போய்ச் சேரணும்
இல்லாட்டி வாய் கிழிய ஏதுக்கிங்கு பாடணும்
வாயெடுத்து சொன்னதெல்லாம் பாட்டாகுமா
சும்மா தீ எடுத்து வெச்சதெல்லாம் வேட்டாகுமா
அட நீ பாடு எல்லோர்க்கும் பொதுவாகத்தான்

ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்
இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்
நீ கேளு தாய் போல நெஞ்சை இது தாலாட்டும்
நாள் தோறும் தாலாட்டில் உன்னை இது நீராட்டும்
வண்ணக் கிளியே ஓ ஓ ஹோ

ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்
இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்