Oru Nandavana Kuyil |
---|
தந்தன தந்தனமே தந்தனா தந்தனா
ஆ தந்தன தந்தனமே தந்தனா தந்தனா னா
ஒரு நந்தவனக் குயில்
சொன்னது தாலாட்டு
அதைக் கொண்டு வந்து
இங்கு தந்தது பூங்காற்று
தத்தித் தவழும் சித்திரம் நீயோ
தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ
முத்தம் பொழிந்திடும்
பூச்சரமோ
மாமன் மனதினில்
பாசமலர்களை
தூவிய பூ மழையோஓ
ஒரு நந்தவனக் குயில்
சொன்னது தாலாட்டு
அதைக் கொண்டு வந்து
இங்கு தந்தது பூங்காற்று
பாதம் பதியும் வழியில்
பூ மரங்கள் நான் நடுவேன்
உனையே உயிராய்
நான் தினம் காப்பேன்
பாதம் பதியும் வழியில்
பூ மரங்கள் நான் நடுவேன்
உனையே உயிராய்
நான் தினம் காப்பேன்
இனிதான எதிர்காலம்
உன் கையிலே
கை வீசி நடைபோடு
பூந்தென்றலே
அழகான நதியே
கரையாக வருவேன்
துள்ளித் திரிந்திடும்
சந்தனத் தாமரையே
ஒரு நந்தவனக் குயில்
சொன்னது தாலாட்டு
அதைக் கொண்டு வந்து
இங்கு தந்தது பூங்காற்று
தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ
முத்தம் பொழிந்திடும்
பூச்சரமோ
மாமன் மனதினில்
பாசமலர்களை
தூவிய பூ மழையோஓ
மின்மினியை நீ நினைத்தால்
தாரகைகள் நான் தருவேன்
பிறை நீ வளர்வாய் பௌர்ணமியாக
மின்மினியை நீ நினைத்தால்
தாரகைகள் நான் தருவேன்
பிறை நீ வளர்வாய் பௌர்ணமியாக
கண்ணாலே நீ போட்ட
வலை தானடா
அதில் சின்ன மீனாக
விழுந்தேனடா
பூ ஒன்றைக் கேட்டால்
பூங்காவை தருவேன்
எந்தன் கனவிலும்
உன்னை அணைத்திருப்பேன்
ஒரு நந்தவனக் குயில்
சொன்னது தாலாட்டு
அதைக் கொண்டு வந்து
இங்கு தந்தது பூங்காற்று
தத்தித் தவழும் சித்திரம் நீயோ
தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ
முத்தம் பொழிந்திடும்
பூச்சரமோ
மாமன் மனதினில்
பாசமலர்களை
தூவிய பூ மழையோஓ
ஒரு நந்தவனக் குயில்
சொன்னது தாலாட்டு
அதைக் கொண்டு வந்து
இங்கு தந்தது பூங்காற்று