Oru Paattu Om Manasa |
---|
ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா
ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா
இந்த பாட்டுக்கேத்த
தாளம் போடும்
காட்டில் பாயும் ஓடை தான்
பூக்கள் பூத்த தோட்டம் கூட
ஆட்டம் போடும் வேளைதான்
மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்
ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா
மேகங்களின் பாட்டுலதான்
தோகை மயில் ஆடுது
மின்னல்களின் பாட்டுலதான்
தாழை மடல் பூக்குது
ஓடைகளின் பாட்டுலதான்
நாணல் தலை ஆட்டுது
உள்ளங்களின் பாட்டுலதான்
சொந்தம் உருவாகுது
ஆக மொத்தம் பாட்டுலதான்
நூறு வகை இருக்குது
தூங்குகிற ஆளை எல்லாம்
தட்டித் தட்டி எழுப்புது
பாலாறும் ஒரு தேனாறும்
நான் பாடும் போது
பாயும் பாரு ஊரே நீராட
ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா
ஹாஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅ
ஹஹாஹா ஹஹாஹா
ஹஹாஹா ஹஹாஹா
வான மழை போல இங்கு
கான மழை ஊத்துது
கான மழை ஊத்துறப்போ
காட்டு மல்லி பூத்தது
காட்டு மல்லி பூத்ததைத்தான்
வண்டு வந்து பாத்தது
வண்டு வந்து பாக்குறப்போ
வண்ண மலர் நாணுது
எத்தனையோ ராகம் வந்து
என் மனசில் கூடுது
எண்ணம் என்னும் பூங்குருவி
எட்டு திசை ஓடுது
நான் பாட புதுத் தேன் ஓட
என் கூடக் கூட நீயும் பாட
ஆசை தோணாதா
ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா
இந்த பாட்டுக்கேத்த
தாளம் போடும்
காட்டில் பாயும் ஓடைதான்
பூக்கள் பூத்த தோட்டம் கூட
ஆட்டம் போடும் வேளைதான்
மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்
மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்
ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா