Oru Pakkam Oru Nyaayam |
---|
ஒரு பக்கம் ஒரு நியாயம்
இன்னொரு பக்கம் இன்னொரு நியாயம்
இரு பக்கத்திலும் நியாங்கள் உள்ளது
அதை குற்றம் என்று
யார் இங்கே சொல்வது
இரண்டும் இங்கே
ஒரு தாயின் மக்களே
அது செல்வதும் எங்கே
அழிவென்னும் திக்கிலே
இது தர்மம்மா தர்மம்மா
அதர்மம்மா
இது தர்மம்மா தர்மம்மா
அதர்மம்மா
ஒரு பக்கம் ஒரு நியாயம்
வன்முறை செயலின் கொடுமைகளை
இங்கே நான் கண்டால்
என் இதயம் தாங்காது
தானே பதறுதடா
முன்னோர் வாழ்ந்த பெருமை எல்லாம்
ஒவ்வொன்றாய் நினைத்தால்
என் மனமே எரிமலையாய்
வெடிச்சே சிதறுதடா
எத்தனை காலம் எத்தனை காலம்
வாழ்க்கையை தேடுவது
எச்சில் இலைக்கு காத்து கிடக்கும்
காக்கையை துரத்துவது
சகோதரா இங்கே
அழிவது யாரடா
சகோதரா இது நடப்பது
யாரால் கூறடா
ஒரு பக்கம் ஒரு நியாயம்
இன்னொரு பக்கம் இன்னொரு நியாயம்