Oru Pennai Parthu

Oru Pennai Parthu Song Lyrics In English


ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை

அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை



கொடி மின்னல்
போல் ஒரு பார்வை
மானோ மீனோ
என்றிருந்தேன்

குயில் ஓசை
போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ
என்றிருந்தேன்

நெஞ்சோடு
நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை
சேர்த்தாள்

இன்று காதல்
ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை


அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை



கலை அன்னம்
போலவள் தோற்றம்
இடையில் இடையோ
கிடையாது சிலை வண்ணம்
போலவள் தேகம் இதழில்
மதுவோ குறையாது

என்னோடு
தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை
சேர்த்தாள்

இன்று காதல்
ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை

அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை

ஆண் &