Oru Poraliyin Payanam |
---|
ஒரு போராளியின் பயணம் இது அவன் போராடி பெற்ற பரிசு இது
ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா தாயின் மடியில் தவழ்ந்தவனே நீ தரைக்குள் தூங்க போறியா
ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா
இளைஞர்களை எழுப்ப வந்த குட்டி சிங்கமே இளம் சூரியனாய் ஒளி வீசிய கட்டித் தங்கமே கொலை வெறியர் ஜாதி பேத தட்டி தூக்கினாரே கொள்கைக்காக வாழ்ந்த உந்தன் உயிரை போக்கினாரே
ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா
இயேசு புத்தர் நபிகள் காந்தி காட்டும் வழியிலே பேசும் புயல் பெரியார் அண்ணா அம்பேத்கார் மொழியிலே குன்றம் போல முழங்கி நடந்த குலவிளக்கு நீயடா உன் கொடி நிழலில் என்றும் நாங்கள் கூடுவோம் பாரடாஆ
ஓய்வில்லாமல் உழைத்தவனே நீ ஓய்வுக் கொள்ள போறியா