Oru Porkaalam |
---|
ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
இந்த நாள் முதல் இளவேனில்
மனம் நீந்திடும் இசைத் தேனில்
எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே
ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
கல்லூரியின் வாசல்களில்
ஏதோ ஏதோ கதைகள்
ஒன்றா ரெண்டா ஓராயிரம்
நன்றோ தீதோ விதைகள்
சொல்லித் தந்த பாடங்களில்
செல்லாது நம் மனது
சொல்லாமலே நாம் கண்டது
எல்லாம் இளமைக் கனவு
வாடாதது அந்தப் பூக்கள்
தெவிட்டாடதது அந்தப் பாடல்
நெஞ்சில் நீங்கிடா நினைவாகுமே
ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
ராஜா உந்தன் ராஜாங்கத்தில்
காலை மாலை இசைதான்
காயங்களை ஆற்றும் அது
கேட்பேன் கேட்பேன் தினம் நான்
ஆரோகணம் அவரோகணம்
ரெண்டும் உண்டு இசையில்
அது போலவே வாழ்க்கை என்று
கால்கள் செல்லும் திசையில்
யாரும் இல்லா எனக்காக
வந்தாய் இங்கே உறவாக
இது நீரின் மேல் எழுத்தல்லவே
ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
இந்த நாள் முதல் இளவேனில்
மனம் நீந்திடும் இசைத் தேனில்
எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே
இருவர் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே