Oru Porkaalam

Oru Porkaalam Song Lyrics In English


ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
இந்த நாள் முதல் இளவேனில்
மனம் நீந்திடும் இசைத் தேனில்
எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே

ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே

கல்லூரியின் வாசல்களில்
ஏதோ ஏதோ கதைகள்
ஒன்றா ரெண்டா ஓராயிரம்
நன்றோ தீதோ விதைகள்

சொல்லித் தந்த பாடங்களில்
செல்லாது நம் மனது
சொல்லாமலே நாம் கண்டது
எல்லாம் இளமைக் கனவு

வாடாதது அந்தப் பூக்கள்
தெவிட்டாடதது அந்தப் பாடல்

நெஞ்சில் நீங்கிடா நினைவாகுமே

ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே

வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே


ராஜா உந்தன் ராஜாங்கத்தில்
காலை மாலை இசைதான்
காயங்களை ஆற்றும் அது
கேட்பேன் கேட்பேன் தினம் நான்

ஆரோகணம் அவரோகணம்
ரெண்டும் உண்டு இசையில்
அது போலவே வாழ்க்கை என்று
கால்கள் செல்லும் திசையில்

யாரும் இல்லா எனக்காக
வந்தாய் இங்கே உறவாக

இது நீரின் மேல் எழுத்தல்லவே

ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே
இந்த நாள் முதல் இளவேனில்
மனம் நீந்திடும் இசைத் தேனில்
எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே

இருவர் : ஒரு பொற்காலம் தொடங்கும்
இளம் பூங்காற்றே
வண்ணப் பூக்கோலம் வரையும்
எந்தன் புதுப் பாட்டே