Oru Raja Vandhanaam |
---|
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ம்ஹ்ம்ம்
ம்ம்ம்
ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்
அவன் ஊரை சொல்லு
பேரை சொல்லாதே அவன்
ஆசை தன்னை தாண்டி
செல்லாதே
ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்
தை மாசம் பொங்கல்
வைக்கும் நேரம் வந்தாச்சு
தாளம் பூ எங்கும் பூத்து வாசம்
வந்தாச்சு
வீடெங்கும் வாசல் எங்கும்
கோலம் போட்டாச்சு விழியோடு
ஏக்கம் வந்து தூக்கம் போயாச்சு
ஒரு பூங்காத்து அது
சூடாச்சு விழி தாள் போட்டு
பல நாள் ஆச்சு அடி பெண்மானே
இது யாராலே அடி ராசாத்தி
பதில் கூறேன்டி
ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்
மகாராணி பட்டம்
கட்டும் எந்தன் செல்வாக்கு
வரவேண்டும் மாலை வானில்
தங்க பல்லாக்கு
வழியெங்கும்
கொன்றை பூக்கள்
பொன்னை தூவட்டும்
வரவேற்க வானம் பாடி
வாழ்த்து பாடட்டும்
இனி ஊர் எங்கும்
என் ராஜாங்கம் அடி நாள்
தோறும் வரும் ஊர்கோலம்
நதி நீரெல்லாம் இனி
தேனாகும் வரும் நாள்
எல்லாம் திரு நாளாகும்
ஓ ஹோ ஹோ
ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்