Oru Santhana Kaattukullae Male |
---|
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆரிரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள
அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே
போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட
நேரம் இல்லே நேரம் இல்லே
நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று
உன்னை விட்டால் யாரும் இல்லை
நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த
கண்ணில் இன்னும் ஈரம் இல்லை
காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ
நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலை போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆரிரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே