Oru Thaaram |
---|
ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே
ஒரு போதும் மறவாதுன்னை
தெரு ஓரம் பாடும் இந்த
மகனே மகனே மகனே
கண் கொண்டு பாரும் அய்யா
வரம் ஒன்று தாரும் அய்யா
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா
ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே
ஆற்றில் ஒரு காலை வைத்தான்
சேற்றில் ஒரு காலை வைத்தான்
சிவனே சிவனே சிவனே
கூழுக்கும் ஆசைப் பட்டான்
மீசைக்கும் ஆசைப் பட்டான்
மகனே மகனே மகனே
பறந்தோடி வாரும் அய்யா
பாவத்தைத் தீரும் அய்யா
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா
ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே
கைக்குள்ளே கனியும் உண்டு
காயை ஏன் தேடிப் போனான்
சிவனே சிவனே சிவனே
படித்தாலும் புத்தி வல்லே
புரியாத மக்குப் புள்ளே
மகனே மகனே மகனே
தலைவா உன் அருளைக் கூட்டு
தெளிவான வழியைக் காட்டு
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா
ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே
ஒரு போதும் மறவாதுன்னை
தெரு ஓரம் பாடும் இந்த
மகனே மகனே மகனே