Oru Thulir

Oru Thulir Song Lyrics In English


சந்தான லட்சுமி
வந்த நேரம் சரியான நேரம்
மங்காத ஜோதி என்றும் இங்கு
நின்றாடும் கோலம்
நலுங்கொன்று சொல்ல
சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம்
நலம் கோடி காண
மங்கலங்கள் மனம் போலக் கூடும்

நன நானா நானா
நான்னா னனனானா

நன நானா நானா
நான்னா னனனானா
நான நானா நானா நானா

 ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே
இந்த வானின் மடியிலே
சிறு பிறையும் வளர்வதென்ன
இந்த அன்னை மடியிலே
தங்கக் கொடியும் படர்வதென்ன
ஒரு வாழ்த்து பாடு இன்று
குக்கூ குக்கூ கூ

ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே
பொன் வெயிலே பொன் வெயிலே

குறுகுறு விழிகளில்
சிறுசிறு நவமணிகள் ஆஹா
அந்த சிறுசிறு மணிகளில்
குறுகுறு கவிமணிகள்

ஒரு சிறு சிரிப்பினில்
புதுப்புது கதிரலைகள்
அந்த புதுப்புது கலைகளில்
இணைந்தது உயிரலைகள்

கைகளில் கம்பன் பாட்டு
காவியம் பாடாதோ
கால்களில் தென்றல் காற்று
ஓவியம் போடாதோ

நடை போடட்டும் விளையாடட்டும்
இந்த செந்தமிழ் புதுக் கவிதை

ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே
இந்த வானின் மடியிலே
சிறு பிறையும் வளர்வதென்ன
இந்த அன்னை மடியிலே
தங்கக் கொடியும் படர்வதென்ன
ஒரு வாழ்த்து பாடு இன்று
குக்கூ குக்கூ கூ

ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே


மணிரதம் ஏறிய
மரகத வீணை இது
உன் மது முகம் தூவிய
புதுமுகப் பூவும் இது
அணிகலன் அணிந்திட
அவசியம் இல்லை என ஆஹா
கொள்ளை அழகுடன் பழகிடும்
அதிசயப் பிள்ளை இது

மெல்லிய பூவுக்கெல்லாம்
மென்மையைத் தந்தாயோ
சொல்லிய சொல்லுக்குள்ளே
சொற்ச் சுவை ஆனாயோ

விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில்
அந்த வானுலகம் இயங்கும்ம்ம்ம்ம்

ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே

ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே

இந்த வானின் மடியிலே
சிறு பிறையும் வளர்வதென்ன

இந்த அன்னை மடியிலே
தங்கக் கொடியும் படர்வதென்ன

ஒரு வாழ்த்து பாடு இன்று
குக்கூ குக்கூ கூ

ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே
பொன் வெயிலே பொன் வெயிலே