Oruvan Piranthan |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
அவன்தான் உலகின் நிஜமான மனிதன்
எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா
ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
தேயாத நிலவே தெம்மாங்கு தமிழே
நூறாண்டு நீ வாழ வேண்டும்
மலர் போல என்றும் மணம் வீச வேண்டும்
மண் மீது நாம் வாழும் நாட்கள்
எடுத்தாலும் கூட கொடுத்தாலும் கூட
எந்நாளும் குறையாது அன்பென்னும் செல்வம்
ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
அவன்தான் உலகின் நிஜமான மனிதன்
எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா
ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
பனிக்காற்றில் மேகம் கரைந்தாலும் கூட
பயிர் வாழ மழை தூறல் போடும்
மழை போல வாழும் மனம் உள்ள பேர்க்கு
வருங்காலம் பூ மாலை சூடும்
பிறர் வாழ உதவி புரிகின்ற பிறவி
சந்தோசம் கொண்டாடும் சங்கீத அருவி
ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
அவன்தான் உலகின் நிஜமான மனிதன்
எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா
ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே