Paadi Parantha Kili |
---|
பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே
பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே
ஒத்தயடிப் பாதையில
நித்தமொரு கானமடி அந்த
வழி போகையில காது
ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு
அது கானா ஆச்சு
கண்ணு முழிச்சா அது
வாழாது வட்ட நிலவு
அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
வீணாச
தந்தவரு யாரு
யாரு
பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே
சொல்லெடுத்து
வந்த கிளி நெஞ்செடுத்துப்
போனதடி நெல்லறுக்கும்
சோலை ஒன்னு
நெல்லரிச்சிப் போனதடி
கல்லிலடிச்சா
அது காயம் காயம்
சொல்லிலடிச்சா அது
ஆறாது பஞ்சு வெடிச்சா
அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா
அது தாங்காது
சேதாரம்
செஞ்சவரு யாரு
யாரு
பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே
பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே