Paadugindren Unnai |
---|
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை
பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை
பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன்
உன் வடிவத்தை ஓர் பொழுது
காணும் வரை வாழுகின்றேன்
வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன்
உன் வடிவத்தை ஓர் பொழுது
காணும் வரை வாழுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன்
நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன்
என்னால் நடக்க முடிந்த வரை
நாயகன் திருவடியை நாடுகின்றேன்
என்னால் நடக்க முடிந்த வரை
நாயகன் திருவடியை நாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்
காலை முதல் இரவு வரை
வரும் வேளைகள் யாவிலும் உன்னுருவைக்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்
காலை முதல் இரவு வரை
வரும் வேளைகள் யாவிலும் உன்னுருவைக்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்
காலை வெய்யிலிலே
உன் திருமேனியைக் காணுகின்றேன்
காலை வெய்யிலிலே
உன் திருமேனியைக் காணுகின்றேன்
பகல் காட்டும் வெய்யிலிலே
உன் திருநீறைக் காணுகின்றேன்
பகல் காட்டும் வெய்யிலிலே
உன் திருநீறைக் காணுகின்றேன்
மாலை வெய்யிலிலே
உந்தன் செஞ்சடை காணுகின்றேன்
அந்தி மாலை வெய்யிலிலே
உந்தன் செஞ்சடை காணுகின்றேன்
வளரும் இரவினிலே நீலகண்டம் காணுகின்றேன்
வளரும் இரவினிலே நீலகண்டம் காணுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை
பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்