Paadum Kural

Paadum Kural Song Lyrics In English


நாயகனின் கோவிலிலே
நாள் முழுதும் காத்திருந்தேன்
காத்திருந்த கண்களுக்கே
காத்திருந்த கண்களுக்கே
அவன் காட்சி தர வேண்டுமம்மா
காட்சி தர வேண்டுமம்மா

பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே

தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே
தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே

பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே

தீபத்தில் ஆடிடும் ஒளி இங்கே
தீபத்தை ஏற்றிய நெருப்பெங்கே

தீபத்தில் ஆடிடும் ஒளி இங்கே
தீபத்தை ஏற்றிய நெருப்பெங்கே
ஆபத்து நீங்கிய மலரிங்கே
ஆபத்தில் உதவிய துணை எங்கே
ஆபத்தில் உதவிய துணை எங்கே

பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே


தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே
தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே

பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே

நல்லவர் சில நாள் மறைந்திருப்பார்
நாள் வரும் போது வெளி வருவார்
நல்லவர் சில நாள் மறைந்திருப்பார்
நாள் வரும் போது வெளி வருவார்
வருவார் என்பதை நானறிவேன்
வருகின்ற நாளை யாரறிவார்
வருகின்ற நாளை யாரறிவார்

பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே

தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே
தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே

பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே