Paalilum Thaenilum Suvaiyedhu |
---|
இசை அமைப்பாளர் : ஆர் கோவர்தனம்
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
பூவிதழ் வாயில் புன்னகை பொழியும்
பொன்மணி செல்வம் இல்லாது
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
அன்னையின் உரிமை இல்லாது
தெய்வத்தை கண்டால்
முனிவர் என்றார்
அவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா
தெய்வத்தை கண்டால்
முனிவர் என்றார்
அவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா
செல்வத்தை தேடும்
செல்வர்கள் யாரும்
பேசும் செல்வத்தை பார்த்தாரா
வெறும் செல்வத்தை தேடும்
செல்வர்கள் யாரும்
பேசும் செல்வத்தை பார்த்தாரா
பேசும் செல்வத்தை பார்த்தாரா
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
கைகளும் கால்களும் நாடகமாடும்
காண்பவர் உள்ளம் இசை பாடும்
கைகளும் கால்களும் நாடகமாடும்
காண்பவர் உள்ளம் இசை பாடும்
ஈன்றவள் வாழ்வே நாடகமானால்
இன்பம் எங்கே உருவாகும்
ஈன்றவள் வாழ்வே நாடகமானால்
இன்பம் எங்கே உருவாகும்
இன்பம் எங்கே உருவாகும்
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
அன்னையின் உரிமை இல்லாது