Paaradi Kuyile Paasa Malargalai (Female)

Paaradi Kuyile Paasa Malargalai (Female) Song Lyrics In English


ஆஅஆஆஆஅஆஅ
ஆஅஆஆஆஅஆஅ
ஆஅஆஆஆஅஆஅ
அஅஆஆஅ
அஅஆஆஅ

பாரடி குயிலே
பாச மலர்களை
பாடடி குயிலே பாத மலர்களை
காலம் முழுவதும்
காலடி நிழலில்
வாழும் குழந்தையே
அவர்கள் மடியிலே

பாரடி குயிலே
பாச மலர்களை
பாடடி குயிலே பாத மலர்களை

தாய் மடியில் சில நாள்
தவழ்ந்து கிடந்த பறவை
வான் வெளியில் பறந்து
திரும்ப வருதல் இயற்கை

யார் பிரிக்க முடியும்
இறைவன் வகுத்த உறவை
ஏழ் பிறப்பும் தொடரும்
உறவில் வரைந்த கவிதை

நான் விரும்பிய
திருநாள் பிறந்தது
என் வரவினில் கதவும் திறந்தது
காலம் முழுவதும்
காலடி நிழலில்
வாழும் குழந்தையே
அவர்கள் மடியிலே

பாரடி குயிலே
பாச மலர்களை
பாடடி குயிலே பாத மலர்களை
காலம் முழுவதும்
காலடி நிழலில்
வாழும் குழந்தையே
அவர்கள் மடியிலே


பாரடி குயிலே
பாச மலர்களை
பாடடி குயிலே பாத மலர்களை

ஆழ்கடலில் நெடுநாள்
அலைந்து திரிந்த படகு
ஓர் கரையில் ஒதுங்க
தவித்துக் கிடந்த பொழுது

நான் வணங்கும் இறைவன்
தந்தை வடிவம் எடுத்தான்
தான் சுமந்த மகளாய்
தழுவித் தழுவி அணைத்தான்

நான் விரும்பிய
வரம்தான் கிடைத்தது
நீர் அரும்பிய முகம்தான் சிரித்தது
காலம் முழுவதும்
காலடி நிழலில்
வாழும் குழந்தையே
அவர்கள் மடியிலே

பாரடி குயிலே
பாச மலர்களை
பாடடி குயிலே பாத மலர்களை
காலம் முழுவதும்
காலடி நிழலில்
வாழும் குழந்தையே
அவர்கள் மடியிலே