Paari Jaadham

Paari Jaadham Song Lyrics In English


பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை
அள்ளி வந்து
மாலை கட்டச் சொல்லாதோ
கண்கள் ரெண்டு

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே

ஏட்டில் இல்லாத தேவாரமே
யாரும் சூடாத பூவாரமே
என்றும் என் வாழ்வின் ஆதாரமே
நெஞ்சம் பாடாதோ பூபாளமே

இளம் பூவேஏ
இளம் பூவே
மனம் நீராடிடும் வேளை
சுக வேளை
மலர் மேலே
இளம் காத்தாடிடும்
சோலை புதுச் சோலை
அன்பே இங்கே வா வா
என் அருகினில்

பாரிஜாதம் பகலில் பூத்ததே


ஆசை எண்ணங்கள் வேரோடுதே
ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே
எங்கும் சிந்தாத சிந்தாமணி ஹோ
என்றும் நீயே என் தேமாங்கனி

அலை போலேஏ
அலை போலே
மனம் விளையாடிடும்
நாளே திருநாளே
நதி போலே
எனை நீ நாடலாம்
மானே இளம் மானே
அன்பே இங்கே வா வா
என் அருகினில்

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை
அள்ளி வந்து
மாலை கட்டச் சொல்லாதோ
கண்கள் ரெண்டு

இருவர் : லால லாலா லா
லல லால்லா லாலா லா
லாலலாலா லா
இருவர் : லால லாலா லா
லல லால்லா லாலா லா