Paari Jaadham |
---|
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை
அள்ளி வந்து
மாலை கட்டச் சொல்லாதோ
கண்கள் ரெண்டு
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
ஏட்டில் இல்லாத தேவாரமே
யாரும் சூடாத பூவாரமே
என்றும் என் வாழ்வின் ஆதாரமே
நெஞ்சம் பாடாதோ பூபாளமே
இளம் பூவேஏ
இளம் பூவே
மனம் நீராடிடும் வேளை
சுக வேளை
மலர் மேலே
இளம் காத்தாடிடும்
சோலை புதுச் சோலை
அன்பே இங்கே வா வா
என் அருகினில்
பாரிஜாதம் பகலில் பூத்ததே
ஆசை எண்ணங்கள் வேரோடுதே
ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே
எங்கும் சிந்தாத சிந்தாமணி ஹோ
என்றும் நீயே என் தேமாங்கனி
அலை போலேஏ
அலை போலே
மனம் விளையாடிடும்
நாளே திருநாளே
நதி போலே
எனை நீ நாடலாம்
மானே இளம் மானே
அன்பே இங்கே வா வா
என் அருகினில்
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை
அள்ளி வந்து
மாலை கட்டச் சொல்லாதோ
கண்கள் ரெண்டு
இருவர் : லால லாலா லா
லல லால்லா லாலா லா
லாலலாலா லா
இருவர் : லால லாலா லா
லல லால்லா லாலா லா